Sutras in Tamil

சூத்திரம் 51

உண்மையை நாடுவோர் சூதாட்டத்தில் ஈடுபடல் அதனைத் தொழிலாகக் கொள்ளல் அதிர்ஷ்டக் குலுக்குகள் அதிர்ஷ்ட வாய்ப்பு விளையாட்டுகள் ஆகியவற்றில் சுயமாகவோ அடுத்தவர் மூலமாகவோ ஈடுபடக் கூடாது. பலரை இழப்புக்குள்ளாக்கி ஒரு சிலரையே வெற்றி வாய்ப்புக்குள்ளாக்குவதால் சூதாட்டம் சமுதாய அரணையே அரித்துவிடும்.§

சூத்திரம் 52

கெட்ட வழியில் வரும் பணத்தால் நல்ல செயல்களைச் செய்ய முடியாது என்பதை உண்மையை நாடுவோர் அறிவதோடு கறைபடிந்த நிதிகள் எந்தவழியில் வந்தாலும் அவற்றை ஏற்ககர். தவறாகப் பயன்படுத்தப்படும் நல்ல பணமும் நியாயமான முடிவைக் கொடுக்காது. தீங்கான முறையில் பெறப்பட்ட பணத்தை நல்லமுறையில் செலவழிக்க முடியாது காரணம் அப்பணம் சாபக்கேடு நிறைந்தது.§

சூத்திரம் 53

எவ்வளவு தான் முக்கியமெனத் தெரிந்திருந்தாலும் பண்பாட்டின் வழி இலஞ்சம் ஏற்பது அநுஷ்டிக்கப் பட்டாலும் கூட உண்மையை நாடுவோர் ஒருபோதும் ஒருவரிடமிருந்து இலஞ்சம் வாங்கவோ அடுத்தவருக்கு இலஞ்சம் கொடுக்கவோ கூடாது. ஜெய்! நேர்மையின் கருணைக்காக அவர்கள் சண்டையிடுவார்கள்.§

சூத்திரம் 54

உண்மையை நாடுவோர் அனைவரும் பணிவை உயர்வாக மதித்துக் காப்பற்றுவார்கள். அவர்கள் தற்பெருமை பேச மாட்டார்கள். அதிகாரத் தோரணையில் ஒரு பாதத்தைத் தொடையின் மேல் வைத்து இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு நாடியை அளவுக்கு மீறி உயர்த்திக் கொண்டு உட்காரமாட்டார்கள். அவர்கள் ஆள்காட்டி விரலால் எதையும் சுட்டிக் காட்டமாட்டார்கள்.§

சூத்திரம் 55

உண்மையை நாடுவோர் எவரும் திருடர்கள் போதைப்பித்தர்கள் நாத்தீகர்கள் காமுகர்கள் ஆகியோருடனும் பக்தியுடையோர் போல் நடித்துப் பாவனை செய்வோரிடமும் சம்பந்தம் வைத்து கொள்ளக் கூடாது.§